Published On: 1:21 AM

தாஜுடீனின் படுகொலை தொடர்பில் பிரிட்டன் நிபுணர்கள் குழு உதவி


பிரபல ரக்பி வீரர் வசிம் தாஜுடீனின் படுகொலை தொடர்பில் முக்கிய தகவல்களை பெறுவதற்கு பிரிட்டன் நிபுணர்கள் குழுவொன்று உதவி வழங்கியுள்ளது.

தாஜூடீனின் படுகொலை குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு மிகவும் சவாலானவையாக தோன்றிய நிலையில் அவர்கள் பிரிட்டனின் நிபுணர்களின் துணையுடன் படுகொலை தொடர்பில் முக்கிய விடயங்கள் கண்டுபிடித்தனர்.

கையடக்கத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமொன்றிடமிருந்து தொலைபேசி உரையாடல் பதிவுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரிட்டனின் தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த கொலை தொடர்பிலான இரு முக்கிய உரையாடல்களை கண்டுபிடித்தனர்.இதன் மூலம் இலங்கை பிரபல இளம் அரசியல்வாதியொருவர் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

Related News



comments powered by Disqus